×

ஊரடங்கின்போது கறி விருந்து வீடியே வைரல் 10 இளைஞர்கள் கைது : ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஊரடங்கின்போது பிறந்தநாள் விழா கொண்டாடி,  கறி விருந்து நடத்திய வீடியோ சமூக வளைதலத்தில் வைரலானதால், 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் திம்மபூபாலபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம்  இளையபாரதி (18)   என்பரின் பிறந்தநாளை முன்னிட்டு  இளைஞர்கள் சிலர் 10க்கும் மேற்பட்டவர்கள்  கறி விருந்து நடத்தி உள்ளனர். அது, வாட்ஸ் அப் மூலம் வீடியோ வைரலாக பரவியது.
இதையறிந்த, பென்னலூர்பேட்டை எஸ்.ஐ அழகேசன் வழக்கு பதிவு செய்து, திம்மபூபாலபுரம் கிராமத்தை  சேர்ந்த 10 பேர்  மீதும் வழக்கு பதிவிட்டு, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி  வருகிறார்.

Tags : youths arrest , Curfews, arrest 10 youth, uttukkottai
× RELATED சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற...